Wednesday 9 September 2009

ஆண்ட இனம் மாண்டழிய, அருள்வாயோ?

பெம்மானே,
பேருலகின் பெருமானே,
ஆண்ட இனம் மாண்டழிய,
அருள்வாயோ?

வெய்யோனே,
என்புருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம்விதிதானோ?
புலம் பெயர்ந்தோம்,
பொலிவிழந்து புலன் கழிந்தோம்,
அழுதழுது உயிர்கிழிந்தோம்
அருட்கோனே!

சோறில்லை,
சொட்டுமழை நீரில்லை,
கொங்கையிலும் பாலில்லை,
கொன்றையோனே!

மூப்பானேம்,
உருவழிந்து முடமானோம்,
மூச்சுவிடும் பிணமானோம்
முக்களோனே!

ஊன்ந்தெய்ந்தோம்
ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம்
உடைக்கோனே!

நீறாகி,
ஐம்புலனும் வேறாகி,
பொன்னுடலம் சேறாகிபோகமாட்டோம்!
எம்தஞ்சை,
யாம்பிறந்த பொன்தஞ்சை,
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும்,
சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய்மண்ணில் சாகாமல்
சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே!
வெம்புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி,
நீஎம்தோல் உரிப்பதுவோ!

முன்னோர் பாற்கடலில்,
அன்று முழுநஞ்சுண்டவனே!
மின்னோர் எம்மவருக்கு
பிரித்து வழங்குதியோ?

பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பு பிரகாஷ் குமார்
திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்

No comments:

Post a Comment